Posts

ஜார்ஜ் புஸ்ஸும் வட்டபேரும் வாசிப்பு அனுபவம்

Image
 ஜார்ஜ் புஸ்ஸும் வட்டபேரும் வாசிப்பு அனுபவம்      ஜார்ஜ் புஷ் போன்றவர்களோடு நட்புக் கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் அறிதானவர்கள். எதிர்பாராத கதை மாந்தர்களை, பார்க்காத கோணத்தில் காட்டும் உங்கள் சிந்தை வியக்க வைக்கிறது.     இக்கதையின் கடைசி வரியும், கதையின்  தலைப்பும்  உங்கள் ஆழத்தை உணர்த்துகிறது .       500 பக்க நாவல் தரும் உணர்வுகளை உங்கள் சிறுகதையில் கடத்துகிறீர்கள் சகோ .               பட்டப்பெயர்-ஆல்  பல சச்சரவுகள்  எங்கள் ஊரில் நடைபெற்றுள்ளது சகோ .அதை வைத்து முன்பு நான் ஒரு குறும்படம் இயக்கியுள்ளேன் .. https://youtu.be/-NYonOQOhqE?si=wd8RIHuwBO0vv54G    நேரம் கிடைக்கும் பொழுது காணுங்கள் .  தான் தோன்றித்தனம் இல்லாத கட்டுரையை எழுத இயலவில்லை என்னால் மன்னித்து விடுங்கள் சகோ  . அந்த ஜார்ஜ்புஷ் நான்தான் சகோ , ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளி செல்ல அழுதவன் நான் , ஒரு பாரக்ராப் படிக்க மூன்று மணிநேரம் போராடுபவன் ,தினமும் அழுபவன் பள்ளி நாட்களில் , அதிகமாக பேசாதவன்...

விபத்துக்கள்

Image
                    " ROAD " என நான் ஒரு குறும்படத்தை கல்லூரியில் இயக்கினேன். அதை இயக்கும் பொழுது மிகவும் பதட்டமாக இருந்தேன். வழக்கம் போல என் நண்பர்களையே நடிக்க வைத்துஇருந்தேன். https://youtu.be/C5J1mB-QXGU?si=YrDp0LkAu9N0OFlZ சபரி, சங்கிலி, சுந்தர், துரைபாண்டி, என் நண்பர்கள் என்பதாளோ என்னவோ மிக கவனமாக எளிமையாக எடுத்தேன், சாலை விபத்தை பற்றி. ஒரு ஆசிரியர் அந்த படம் பார்த்து' இது ஒரு படமா 'என சிரித்தார். சாலை விபத்து போன்ற கொடுமையான ஒன்றை அனுபவித்தர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் மனநிலை. பல விபத்துக்களை என் நுண்நுணார்வால் தப்பித்துள்ளேன், அதை என்னாலேயே நம்பமுடியவில்லை மற்றவர்கள் எப்படி,.... வாகனம் திடீரென சுண்டி இழுக்க வேகத்தை குறைக்கிறேன் என்னை தாண்டி சென்ற ஒரு வாகனம் ஆட்டோ க்கடியில் மாட்டி விட்டது, வாகனம் நம்மை ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொள்கிறதோ என தோன்றுகிறது. நேற்று என் நண்பன் ஒருவனுக்கு விபத்து ஏற்பட்டது, பெரிதாக ஒன்றும் இல்லை அவனுக்கு, மருத்துவமனை சென்று TT ஊசி போட்டு வரும் வழியில்,.. விபத்து நடந்த இடத்தில் விசாரித்து விட்டு CCTV ...

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

Image
         சிறு மாற்றத்துக்காக வெண்முரசில் இருந்து கொண்டு மூச்சு வாங்குவதற்க்காக கையில் எடுத்த புத்தகம் " விண்ணளந்த சிறகு " . இயற்கை சார்ந்த சிறிய புத்தகம் ஆனால் மிகப்பெரிய உலகை காட்டும் விரிவான புத்தகம். நாற்பது ஆண்டுகள் தேடல் கொண்ட,  நூற்றி பதினைந்து பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகம் . இயற்க்கை விரும்பிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் .    நாடு  என்பது மக்களால் மட்டும் ஆனது அல்ல , அதில் ஓடும் ஆறுகள் , மலைகள் ,ஓடைகள் ,காடுகள் ,அங்கு வளரும் தாவரங்கள் ,காட்டுயிர்கள் , சிற்றுயிர்கள் , இவை அனைத்துமே ஒரு நாட்டின் முழு பரிணாமம் . ஓடி ஓடி பொருள் சேகரிக்கும் அவசரத்தில் இதையெல்லாம் மறந்து இருப்பது மனிதர்களின் அறிவின்மை . பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல் , " நிஸகாந்தி " என்ற ஒரு பூச்செடி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் இரவில் இரண்டு மணி நேரம் மட்டும் பூப்பதாகவும் , புத்தபூர்ணிமா நாளில் பூப்பது , என என்னை வியப்பில் ஆழ்த்தியது அதன் தகவல்கள்  . இந்த செடியை எழுத்தாளர் தன் வீட்டீலேயே வளர்த்து பார்த்து இயற்கையின் ...

உருமாற்றம் - நாவல் வாசிப்பு அனுபவம்

Image
  நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃபிரான்ஸ் காஃப்கா , ஆஸ்திரிய நாட்டு எழுத்தாளர் , சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் . மனிதச் சீரழிவையும் , வாழ்வின் கொடூரங்களையும் , அவரது பாணியில் எழுத்தாக மாற்றி பல உன்னத படைப்புகளை இவ்வுலகத்திற்கு தந்தவர் .  இவரது எழுத்தின் பாதிப்பு கொண்ட  எழுத்தாளர்கள் இன்றும் உள்ளனர் .  இவரது படைப்புகளை சாதாரணமாக வாசிக்க இயலாது . வாழ்வின் சிக்கல்களை , பல்வேறு பட்ட மனித உளகிளர்ச்சிகளை ,மிக ஆழமான நுட்பத்துடன் கதைப்படுத்தி இருப்பார் .  - உருமாற்றம்  - சீனாவின் நெடுஞ்சுவர்  - ஒரு நாயின் ஆராய்ச்சி  - வளை  - தண்டனைக் குடியிருப்பில்  - இராட்சத மூஞ்சுறு                                        என்ற 6 சிறுகதை தொகுப்பே இந்த புத்தகம் .                         07-12-2022 - ல்  வாசிக்க ஆரம்பித்து 27-12-2022 - ல் நிறைவு பெற்றது.  240 பக்கம் வ...

பிரபஞ்சன் | வானம் வசப்படும்

Image
 பிரபஞ்சன்  இவரை பற்றி சிந்திக்கும் போதெல்லாம் என் நினைவில் வருபவை இவரின் சில வரிகள் . " வேலையும் சம்பளமும் மனித இனத்திற்கு எதிரானது " இந்த வரியில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளது . உலகின் மிக சிறிய கதை என ஏதேதோ கதை கூறுகிறார்கள் ஆனால் என் பாட்டி எனக்கு சொன்ன அந்த ஒரு வரி கதை தான் மிகச்சிறிய கதை அது " ஒரு ஊர்ல ஒரு நரி கதை அதோட சரி " இந்த கதையிலும் தந்திரம் நிறைந்துள்ளது .  இன்னும் சில சம்பவங்கள் , ஒரு வழிப்போக்கன் இரவு 1.30 மணிக்கு  வீட்டுக் கதவை தட்டி, என்ன வேணும் தம்பி ஏன் இந்த நேரத்துல கதவை தட்டுறீங்க ? , இல்ல சார் நைட்டு 1.30 க்கு ஒரு எழுத்தாளர் என்ன செய்வாரு னு பாத்துட்டு போலாம் னு வந்தேன் என்ன செய்றீங்க சார் ? , இந்த அளவிற்கு இவர் மீது பித்துக் கொண்ட வாசகர்கள் அப்போது இருந்துள்ளனர் . இரு வேளை உணவிற்கு உத்திரவாதம் இருந்திருந்தால் இன்னும் சில நல்ல படைப்புகளை படைத்திருப்பேன் ,நான் ஒன்றும் புதுமை பித்தன் அளவுக்கு வறுமையில் இல்லை , எனக்கடுத்து வரும் தலைமுறை என்னை விட நல்லா இருக்கணும் என அவர் கூறும்  போது மனம் கலங்குகிறது .  பெரிய செல்வம் செழித்த வீட்...

கேள்வி - பதில்கள்

Image
                      15 கேள்விகளில் 5 -ற்கு  விடை அனுப்பியுள்ளேன் , கடிதம் அனுப்பிய 15 பேருக்கும் மிக்க நன்றி .   கடவுள் நம்பிக்கை உள்ளதா நந்தா ?                                                                                                      பொதுவாக கட+ உள் = கடவுள் , தன்னை கடத்தலே கடவுள் என்பது ஒரு விதி , 'அஹம்ப்ரமாம்ஸி ' நானே கடவுள் என்பதும் ஒரு விதி  , இந்த உலகில் பல கோடி கடவுள்கள் உள்ளன ,அதிலும் தமிழர்களுக்கு அனைத்துமே இறையம்சம் கொண்டவை, குலதெய்வ வழிபாடு  இயற்க்கையை வணங்குதல்  மற்றும்  புனிதமாக தோன்றும் அனைத்துமே தமிழர்களுக்கு வணங்கத்தக்கது , பெற்ற அன்னை , பூர்விக நிலம் , ஐம்பூதங்கள் , காளை , இளம் வயதில் மரணித்தவர்கள் ,செய்யும் தொழில் , ஆயுதங்...

நான்தான் ஒளரங்கசீப் - நாவல் வாசிப்பு அனுபவம்

Image
 நான்தான் ஒளரங்கசீப் - நாவல் வாசிப்பு அனுபவம்  அல்லாஹு அக்பர்.  அன் லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸூலுல்லாஹ். லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ். மாஷா அல்லாஹுகான வமா லம் யஷஃலம் யகுன்.                                           சாரு நிவேதிதா எழுதிய அழகிய புத்தகம் , இவரை அறியாத வாசகர்கள் இருக்க முடியாது ஆனால் அனைவராலும் இவரின் எழுத்தை உள்வாங்கிக்கொள்ள இயலாது , தொடர்ந்து படித்தால் வாய்ப்பு உள்ளது .                                               ஹிந்தி யை மற்றுமே பேச தெரிந்த  கங்காராம் என்ற அகோரியின் உடலில் இருந்து பார்சி  மற்றும்  அரபி ,மொழியில் ஒளரங்கசீப் தன் வரலாற்றை எழுத்தாளரிடம்  கூறுவதாக  அமைந்துள்ளது நாவல் ,கதையில் வரும் சில மனிதர்களும் பல சம்பவங்களை கூறுவது கதையை முன்நகர்த்துகிறது.         ...