முதல் சிறுகதை - இளங்காவல்

 




   அந்த இரவு ஒரு அழகிய அமாவாசை கிழவூரின் ஜமின்தார், மாயன் சேர்வராயனுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் கழித்து இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர், வெகுச் சிறப்பாக காளியம்மனுக்கு அமாவாசை பூஜை நடைபெற்றது. களத்துக் காவல் செய்யும் அனைத்து ஆண்களும், ஊர் பொதுமக்களும் அந்த இரவை பருகிக்கொண்டு ஜமின் தாருக்கு வாரிசு உண்டானதை திருவிழா போல் மகிழ்ந்து கொண்டாடினர். பச்சரிசி சோரும், காயடிக்கப்படாத கெடாய் கறியும் கோவிலின் வெளிப்புற திண்ணையில் வாழை இலையில் பந்தத் தீ வெளிச்சத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஊரின் எல்லையில் களத்து மேட்டில் குமித்து வைக்கப்பட்டிருந்த புதிய நெல்லின் மணம் கருத்த பாண்டிக்கு போதை ஏற்றியது, நேரமாகியும் இன்றும் ஒருவரும் காவலுக்கு வரவில்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் கருத்த பாண்டி.

கருத்தபாண்டி இருபத்திரண்டு வயதான இளம் இளைஞன், காவலுக்கு வந்து பழக்கப்பட்டு இரண்டு வாரங்களே ஆகின்றது. புதிய தொழில் ஆர்வத்தில் தனியாக, முதலாவதாக இருளப்பசாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட பதினாறு ஏக்கரில் அறுவடை செய்து குவிக்கப்பட்ட நெல்லுக்கு காவலாக வந்துள்ளான்.

மேலக்காட்டில் இருந்து சின்னான் என்பவரின் தலைமையில் புதிய களவுக் கூட்டம் கிழவூருக்கு களவுக்கு வந்தது. தூரத்தில வரும் போதே

 "சின்னா, இம்புட்டு நெல் குமிச்சி வச்சுருகாங்க காவலுக்கும் யாரையும் காணும் ? நமக்கு பொறி வச்சுருக்காங்களோ? " என்றான் நிமிலன்.

 "இல்ல நல்ல தூது வந்தது சங்கடம் இல்லை என்றான் சின்னான்.

"என்ன தூது?"

"இது கோவில் நெல் ஊர்ல ஒரு எழவு அதான் அல்லாம வச்சுருகாங்க, ஜமின்தாருக்கு வாரிசு பிறந்திருக்கு அமாவசை சிறப்பு பூஜை அதான் எவனும் இன்னும் காவலுக்கு வரல" என்றான் சின்னான்.

 "ஓகோ.. அதான் நம்ம வெல்லன வந்துட்டமோ?"

எட்டுப் பேர் கொண்ட குழு, சப்த்தம் இல்லாமல் அடி எடுத்து வைத்து நெல்லை நெருங்கினர். குமித்து வைக்கப்பட்ட நெல்லின் பின்புறம் இருந்து கருத்தப்பாண்டி, மெல்லிய அசைவை உணர்ந்து வெளியில் வந்தான். களவுக்கு எட்டுப் பேர் வந்திருப்பதை தலைப்பாகையை வைத்து எண்ணிக் கொண்டான். இளம் வயது "சட்டென்று ஓடிப்போய் எட்டு பெரையும் வீழ்த்திட விட நினைத்தான். சற்று பொருமையாக யோசித்தான்... "

"சுத்தி போய் பாருங்கனு" ஏழு பெருக்கும் சைகையால் உத்தரவு போட்டான் சின்னாள்.

சற்று நிதானித்து , இருக்கமாக பிணைக்கப்பட்ட மூங்கில் கூடையை கையில் எடுத்து, களத்தை ஒட்டி அமைந்திருந்த கண்மாயிக்குள் தூக்கி எறிந்தான் கருத்தப்பாண்டி. 

சத்தம் கேட்ட களவுக் கூட்டம், எவனோ ஒருவன் நம்மை பார்த்து விட்டு ஓடுவதாக நினைத்து, தங்கள் மடியில் பிறக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை வீசி எறிந்து கொண்டே ஓடினர், கரையை அடைந்ததும் கற்கள் தீர்ந்தது மடியில், தீப்பந்த ஒளியில், கரையில் இருந்து கண்மாய்க்குள் பார்த்தப் போது அரைக்கண்மாய் இருந்த தண்ணீரில் ஒரு மூங்கில் கூடை மிதப்பதை கண்டனர். எட்டு பெரும் ஒன்று போல திரும்பி நெற்கதிரைப் பார்த்தனர், துளியும் பயமில்லாமல் வலதுகையில் காவல் கம்பும், இடது கையில் தீபந்தமும் வைத்து நின்று கொண்டிருந்தான் கருத்தப்பாண்டி.

"கிழவூர் காரையங்களுக்கு புத்தி இல்லய்யா? சின்னப் பயல தனியா காவலுக்கு நிறுத்திருக்காங்க " என்று சத்தமாக கூறினான் நிமிலன்

"வேற இடம் பார்த்து போங்க, இது என் காவல், மீறி எவனாவது நெல் குமிக் கிட்ட வந்தால், சொர்க்கலோகம் அனுப்பிடுவேன்'' என்று திமிராக கூறினான் கருத்தப்பாண்டி

"தம்பி ஓரமா போய் ஒக்காரு , இல்லன்னா ஓன் காவக் கூட்டாளிகள கூட்டி வா" என்றான் சின்னாள்

"அதுக்குள்ள நாங்க பூராம் கொண்டு போயிடுவோம்" என்று சிரித்துக் கொண்டே நிமிலன் கூற மத்த ஏழு பேரும் சிரித்தனர்...

"சின்ன பயலுக்கு பேச்ச பாரு" என்றான் கூட்டத்தில் ஒருவன் .

களவுக் கூட்டம் சின்னானை நெருங்கி நின்றது, கருத்தப்பாண்டி நெல் குமியை விட்டு அவர்கள் அருகில் சென்றான் காவல் கம்பை தரையில் குத்தி ஓசை எழுப்பிக் கொண்டே,

"தேவையில்லாம காவு வேண்டாம் சின்னான், இவன ஓரமா கட்டி போட்டுறுவோம்" என்றான் நிமிலன்.

"பொறு என்ன செய்யறதுனு பாப்போம்"

"இது என் காவல் வேற இடத்துக்கு போங்க"

"என்ன நெஞ்சலுத்தம் பொடிப் பயலுக்கு"

"அவனுக்குள்ளயும் நம்ம இரத்தம் தான ஓடுது''

"சரிதான், காவக் காரனுக்கும், களவுக்காரனுக்கும் ஒரே குலச்சாமி தான" என்றான் நிமிலன்.

ஒரு நிபந்தனை "அந்த இருளப்பசாமி ஆணையா சொல்றேன், என்னய்ய வெட்டி எரிஞ்ச்சுட்டு இந்த நெல்ல அள்ளிட்டுப் போங்க முடிஞ்சால் "...

"அமாவசை அதுவுமா காவு வேண்டாம் னு நினைச்சா விட மாட்டிக்கானே" என்றான் நிமிலன்

"நானும் உங்கள அதுக்கு தான் வேற இடம் போக சொன்னேன், எட்டு காவு எதுக்கு தேவையில்லாம-னு " என்று கூறி சிரித்தான் கடுத்தப்பாண்டி.

"என்ன நடக்க போகுதோ " என்றான் கூட்டத்தில் ஒருவன்

களவுக் கூட்டம் கருத்தப்பாண்டியை சுற்றி நின்றது, தீபந்தத்தைப் கம்பத்தில் வைத்து விட்டு, காவல் கம்பை இறுக்கி பிடித்தான் கருத்தப்பாண்டி. 

  கருத்தப்பாண்டி மனதுக்குள் வேண்டிக் கொண்டான், இருளப்பசாமியை 

"உன் பயிரை காப்பற்ற வேண்டியது என் கடமை, என் துணிவுக்கு துணை நில்" 

"இவன் சோலிய முடிச்சிட்டு சீக்கிரம் நம்ம வேலையை பாப்போம்"என்று நிமிலன் சத்தமாக கூறினான். 

"நீங்க கத்துகிட்ட கம்பு வித்த மேல நம்பிக்கை இருந்தால் " என்று கருத்தப்பாண்டி சொல்லி முடிக்கு முன், எட்டு பேரும் கையில் இருந்த வேல் கம்பால் குத்துவதற்க்கு வாய்ப்பாக கையை பின் இழுப்பதை கவனித்து சுதாகரித்து கொண்ட கருத்தப்பாண்டி தாக்க ஆரம்பித்தான், தன் பக்குப்படுத்தப்பட்ட காவல் கம்பால்.

காற்றின் பேரிரைச்சல் கேட்க ஆரம்பித்தது ஒன்பது கம்புகள் ,  

"வெட்டவெளியில் அவ்வளவு வேகமாக சிட்டுக்குருவி சிறகசைப்பது போலும், படகில் துடுப்பு போடுவது போலும் மின்னல் வேகத்தில் இவர்களின் கம்புகள் சுழன்றும் ஒரு நிகழ்வும் நிகழவில்லையே "என குவித்து வைக்கப்பட்ட நெல்மணி யோசித்தது.

ஒன்பது கம்புகளின் சத்தம் காளியம்மன் கோவில் கொண்டாட்ட ஓசையில் அமுங்கி போனது. கருத்தப்பாண்டியின் வேகம் எட்டு பேரையும் நிலை குளையச் செய்தது. நிமிலன் முக்கிக் கொண்டே சொன்னான், "எவ்வளவு நேரம் யா சமாளிப்பான், ஊருக்குள்ள இருந்து ஆள் வந்துற போறாங்க". எட்டு பேரும் தீவிரமாக முயற்ச்சி செய்தும் குத்தீட்டியை கருத்தப்பாண்டி அருகில் கொண்டு செல்ல முடியவில்லை. வியர்வை துளியில் ஒன்பது பேரும் நனைந்தனர். பதினெட்டு கைகளும் வலியில் திக்கு முக்காடின, ஒன்பது இதயங்களும் இரவை உள்வாங்கி துடித்தது.

"குத்திடான்டா" என்று சின்னான் கருத்தப்பாண்டிக்கு பீதியை கிழப்ப முயற்சி செய்தான், ஆனால் பீதி அடைந்ததோ மற்ற எழு பேர். மூச்சை இழுத்து பிடித்து கருத்தப்பாண்டி எட்டு மனித வட்டங்களுக்கு இடையில் இருந்து வெளியில் வந்து தலையை கீழே சாய்த்து ஒரு முன் சுத்து சுத்தி கம்மாய் கரைக்கு சென்றான், 

பின்னால் ஓடி வந்த நிமிலனின் பிடதியில் முருக்கேரிய பலா மர அடி ஆழத்தில் நேராக வெட்டி எடுக்கப்பட்டு பருவம் செய்யப்பட்ட கருத்தப்பாண்டியின் காவல் கம்பு வீச் என்று அடித்த வேகத்தில் சித்தம் கலங்கி சாய்ந்தான்.

நிமிலனின் மூச்சை பிடித்து பார்த்த எட்டு பேரில் ஒருவன் " நல்ல வித்தக்காரன் ஒரே அரைல பிடதி நரம்ப அத்துட்டான், இரத்தம் வெடிச்சிருச்சு மூளைக்குள்ள, பட்டுன்னு போய்ட்டான்" என்றான்.

"சீக்கிரம் குத்தி முடிப்போம் சோலிய முடிப்போம் ஊர் காரங்க வந்துரப் போராங்க" என்றான் இன்னொருவன். அமாவசை பூஜை சத்தம் அதிகமாக கேட்க தொங்கியது, மணி ஓசையும், மக்களின் ஆரவார குரலும்.

நிமிலனின் மரணத்தை கண்ட மற்ற ஏழு பேரும் திகைப்படைந்தனர், தாக்குதலின் வேகம் பயத்துடன் கலந்து குறைந்தது. வெற்றிப் பூரிப்பில் இருந்த கருத்தப்பாண்டியின் வலது கைக்கு பின் முட்டிக்கு மேல் உள்ள சதையை கிழித்தான் சின்னான்.

வெறிகொண்ட கருத்தப்பாண்டி ஆக்ரோசமாக தாக்குதல் நடத்தினான். கையிலிருந்து வலிந்த இரத்தம் கம்பின் மீதும் வலிந்து பிசுபிசுப்பை ஏற்ப்படுத்தியதால் இருக்கமாக பிடிக்க இயலவில்லை, மீதி இருந்த ஏழு பேரில் ஒருவன் கருத்தப்பாண்டியின் தலைக்கு குறி வைத்து ஓங்கும் போது ,காவல் கம்பால் அவனுடைய தொண்டைப் பல்லத்தில் கருத்த பாண்டி 'உரலில் உலக்கு குத்துவதுப் போல' குத்தியத்தில் உடலின் மொத்த நரம்புகளும் இழுத்துக் கொள்ள உடல் விரைத்து விழுந்தான் ஓங்கியவன்.

இருவரை பழிக்கொடுத்த பதட்டத்திலும் கோவத்திலும் சின்னான் நிதானமாக கருத்தப்பாண்டியின் உடல் மொழியை கவனித்தான். அடிவரிசையில் முக்கோண சுவடை ஆரம்பித்த கருத்தப்பாண்டியின் இடது காலின் சுண்டு விரலை சின்னான் தனது வேல்கம்பை ஊன்றிய வேகத்தில் விரலும், இரத்தமும் தெரிந்தது. கருத்தப்பாண்டி வலியை பொருட்ப்படுத்தாமல் தாக்குதலில் ஈடுப்பட்டான். தெற்கு மூலையில் ஒரு கருத்த நாய் கண்கள் மட்டும் மின்னின, 

கிழவூரில் உள்ள நாய்களுக்கு எல்லாம் பொது நாயான அது அந்த ஊரின் பாதுகாவலன், கோடாங்கி இரவு குறி சொல்லி வரும் போது கூட மற்ற நாய்கள் அமைதியாக இருந்தும் இது சத்தம் எழுப்பி கொண்டே இருக்கும். கருத்தப்பாண்டி எப்பொழுதுமே தான் உண்ட மாமிச கழிவுகளோடு சேர்த்து சில மாமிசங்களையும் வைத்து நாய்களுக்கு வைப்பது வழக்கம், ஊரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கும் போது இந்த நாய்க்கு மட்டும் எப்படி இங்கு நடக்கும் போராட்டம் தெரிந்தது என கண்மாய்கரை சிந்தித்தது.

கருத்த நாய் வேகமாக ஓடி வந்து பாய்ந்து ஆறு பேரில் ஒருவன் மீது , தோல்ப் பட்டையில் இரண்டு கால்களும், வயிற்று பகுதியில் இரண்டு கால்களும் வைத்து கீழே தள்ளியதில் மண்ணில் நீட்டி கொண்டிருந்த கூரிய கத்தி போன்ற கருங்கல் அவன் பிடதியில் சொருகியது.  

கருத்தப்பாண்டி , நமக்கு 'துணை' வந்ததை எண்ணி பெருமிதம் கொள்ளும் வேலையில், குத்தீட்டி போன்ற வேல்கம்பை மண்ணில் தேய்த்து மன்னை அள்ளி சிதறினர் மீதி இருந்த ஐந்து பேரும், அதில் ஒருத்தன் தனது இடது கையை நாயின் வாயில் கடிக்க குடுத்து விட்டு, வலது கையால் தனது இடுப்பில் இருந்த சூரி கத்தியை எடுத்து நாய் மீது ஆறு குத்து குத்தியதில் நாயின் சீரிய இரத்தமும் இவன் இடது கையில் ஏற்ப்பட்ட நாயின் பல் பதிந்த இரத்தமும் வழிந்தது, அதே கத்தியை இறுக்கி பிடித்தவாறு கருத்தப்பாண்டி யை நெருங்கினான். இன்னொருவன் கீழே கிடந்த உருளை கல் ஒன்றை கருத்தப்பாண்டியின் தலையில் ஓங்கி எறிந்தான், தடுமாறிய கருத்தப்பாண்டியின் வயிற்றில் அதே கத்தியால் கிழித்தான் அழம்பதிய கருவிழி இரண்டும் பாதி மேல் நோக்கியப்படி ”இது என்ன ஏமாற்று வித்தை, சிலம்பாட்டத்தின் போது எங்கிருந்து வந்தது சூரியும், கல்லும், கோழைகளா ”என சிரித்தான். 

 ”முடிந்தால் மீண்டும் முயற்சி”. 

விரைவாக தன் தலையில் கட்டி இருந்த தலைபாகையை எடுத்து, கீழே தொங்கிய குடலை வயிற்றுக்குள் அமுக்கி கட்டினான் கருத்தப்பாண்டி, மூச்சை இழுத்து விட்டு கண்மாயில் குதித்தான். மீதம் இருந்த ஐந்து பேரும் விழித்தனர் என்ன செய்ய என்று? சின்னான் கூறினான், ‘ ஆரம்பத்தில் கூறிய நிபந்தனை முடிந்து விட்டது உன் உயிர் போகிறது’ என்றான். அந்த நான்கு பேரும் நெல்மணி பக்கம் திரும்பினர்.

நீந்திக்கொண்டே கருத்தப்பாண்டி கூறினான் ‘இன்னும் உசுரு போகலேயே’ வலியுடனும் கோபத்துடனும்.  

‘இப்பவும் தெம்பு இருக்கா உனக்கு? ’

 ‘உங்களுக்கு தெம்பு இருந்தால் தொரத்தி வாங்க’

  ஐவரும் சலிப்புடன் கண்மாயில் இறங்கினர், அதே இடத்தில் நீந்திக் கொண்டிருந்த கருத்தப்பாண்டி ஐவரும் அருகில் வரவும் மூழ்கிக்கொண்டான்.

 ‘அந்த காரீரிருளுக்குள், கருத்தப்பாண்டியின் இரத்தம் கலந்த கண்மாய் நீரின் நிறத்தை காண இயலவில்லை அந்த ஆகாயத்துக்கு’

கூரான இரும்பு தண்டை வலைத்து தன் காலில் தன் தாய் அணிவித்த வீரத் தண்டையை கையில் எடுத்து இரு கையாலும் விரித்து நேராக்கும் போது வயிற்று இரத்தம் கூடுதலாக வெளியேறியது, கத்தியாக மாற்றம் செய்யப்பட்ட தண்டையை வைத்து பதுங்கி பதுங்கி மூன்று பேரின் கொத வலையை அறுத்தான் கருத்த பாண்டி.

மீதம் இருந்த இருவரில் ஒருவன் சின்னானை கருத்தப்பாண்டி என நினைத்து, சின்னானின் முதுகில் தொற்றிக்கொண்டு, தன் இடது கையை சின்னான் கழுத்தில் இருக்கமாக பிடித்தான் மூச்சு விட முடியாமல் நீந்திக் கொண்டிருந்த இரண்டு கால்களையும் சின்னான் இடுப்பில் சுற்றினான், எடை கூடியதால் நீந்த முடியாமல் தவித்தான் சின்னான்.

கொஞ்ச துரத்தில் நீந்திக்கொண்டே இத பார்த்த கருத்தப்பாண்டி வலி தாங்க முடியாமல் கரை ஏற எத்தனித்தான்.

சின்னான் தனது வலது கட்டைவிரலை நீவி விட்டு பின்புரம் தொங்கி கொண்டிருப்பவன் கருத்த பாண்டி என நினைத்து அவன் வலது இடுப்பில் வலது கட்டை விரலால் ஓங்கி குத்தியதில் விரல் முழுவதும் இடுப்புக்குள் சென்று வெளி வந்தது, அமாவசை இருட்டிலும் லேசாக ஒளி தெரிய அவன் நாடியை பிடித்து சுழற்றி விட்டதில் தலை தொங்கி மூழ்கினான்.

ஒருவன் கரை ஏறுவதை பார்த்த சின்னான், நீந்திக்கொண்டே கத்தினான், ‘இவனை கொன்று விட்டேன் நெல்லை அள்ளு’ என்று, 

பேச்சு குரல் மெல்லிசாக கேக்க கருத்த பாண்டி கரையில் கிடந்த நிமிலனின் வேல்கம்பை எடுத்து மிகவும் தோய்ந்து போய் நின்றான், சின்னான் நெருங்கி வருவது தெரிந்ததும், முழு பலத்தோடு ஓங்கி எறிந்த வேல்கம்பு மிக சரியாக நிமிர்ந்து பார்த்த சின்னானின் கண் வலியாக மூளைக்குள் இறங்கியது.

உடம்பில் மொத்த இரத்தமும் கண்மாயில் கரைந்த பின்பும் சிந்தியது இரத்த துளிகள், கையில் தீப்பந்தத்துடன் நெல் குவியலுக்கு அருகில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தான் கருத்த பாண்டி

பூஜை முடிந்து காவலுக்கு திரும்பிய சக காவலாளிகள் வருவதை கண்டு எழுந்து நின்று தள்ளாடினான்.

அனைவரும் பதறி போய் சுற்றும் முற்றும் பார்க்க, நிதானமாக நடந்த அனணத்தையும் கூறினான் கருத்த பாண்டி.

அனைவரும் மெய்சிலிர்த்து கருத்தபாண்டியை கண் கலங்க பார்த்தனர். "என்னைய இந்த கரையடியிலேயே புதச் சுருங்க, அந்த எட்டு பேரு உடம்பையும் தேடி எடுத்து அவுக அவுக வீட்டுக்கு அனுப்பிருங்க" என்று கூறிவிட்டு தீப்பந்தத்தை நட்டு விட்டு, "இனி காவல் உங்கள் பொறுப்பு" என்று கூறி மண்ணிலே சரிந்தான் அந்த இளைஞன்,...



                  - ம. ஆ.சு.மு.த.பொ.நந்தகுமார்



இது என்னுடைய முதல் சிறுகதை மனமிருந்தால் பகிருங்கள் பாராட்டுங்கள்

        

Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்