Posts

Showing posts from March, 2022

குமரித்துறைவி- வாசிப்பு அனுபவம்

Image
               1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஜோ.டி.குரூஸ் எழுதிய " ஆழி சூழ் உலகு " நாவலில் சில இடங்களில் மெய்சிலிர்த்தேன் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் ஆன தொடர்பை நினைத்து . மதம் மாறிய மீனவர்கள் மச்சான் சுவாமிக்கு ( முருகனுக்கு ) நடுக்கடலில் இருந்துகொண்டு திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்து தேங்காய் உடைக்கும் சடங்குகள் . திமிங்கலங்கள் படகை சூழ்ந்த போதும் குமரி அம்மன் காப்பாற்றுவாள் என எண்ணுவது. இரண்டு வரிகளில் உள்ள இரண்டு சம்பவங்கள் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது வாசிக்கும்போது அதுபோல் , " குமரித்

வேர்கள் - நாவல் வாசிப்பு அனுபவம்

Image
   4.03.2022 - ல் வாசிக்க ஆரம்பித்தேன் 14.03.2022 - ல் 911 பக்கங்களும் நிறைவு பெற்றது , மனது ஏனோ திகைத்து நிற்கிறது.  சூரிய வெளிச்சம் படாத ஆழ்கடலின் அடியில் உலாவும் மீன் அறியாது இப்பிரபஞ்ச உலகின் தோற்றத்தை .நாம் சுவைக்கும் மாம்பழம் அறியாது எப்போது ஊன்ற பட்ட மாமரத்தின் எத்தனாவது தலைமுறை தான் என்பதை .அதே போல் நம் மூதாதையர்கள் பற்றி நாம் ?  அலெக்ஸ் ஹேலி என்ற எழுத்தாளர் தலைமுறை தலைமுறையாக செவிவழி சொல்லபட்டு வந்த தன் சொந்த பாட்டனின் கதையை ,தன் குல வரலாறை தேடி கண்டடைந்தது ஆப்ரிக்க கருப்பின மக்களின் துயரம் தோய்ந்த மற்றும் அழகிய கலாச்சார வாழ்வியலை . 12 ஆண்டு கால கடின தேடலும் ,ஆராய்ச்சியும், மூன்று லட்சம் km தூர பயணங்களும், ஒரு வரலாற்றை பதிவு செய்ய அந்த இனத்தில் ஒருவனாகவும் ,எழுத்தாளனாகவும், அலெக்ஸ் ஹேலி செய்த தியாகம் போற்றுதலுக்குரியது அதனால் தான் எழுதி முடித்து 46 ஆண்டுகள் ஆகியும் இன்றும் பேசுகிறோம் . இப்படி ஒரு புத்தகத்தை அச்சுபிசாகமல் மூல நூலுக்கு இணையாக (Roots) தமிழில் (வேர்கள் ) மொழி பெயர்த்த பொன்.சின்னதம்பி முருகேசன் அவர்களின் உழைப்பு போற்றுதலுக்குறியது ,வணக்கத்திற்குறியது , தமிழ்ச்சமூ