ஜார்ஜ் புஸ்ஸும் வட்டபேரும் வாசிப்பு அனுபவம்
ஜார்ஜ் புஸ்ஸும் வட்டபேரும் வாசிப்பு அனுபவம் ஜார்ஜ் புஷ் போன்றவர்களோடு நட்புக் கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் அறிதானவர்கள். எதிர்பாராத கதை மாந்தர்களை, பார்க்காத கோணத்தில் காட்டும் உங்கள் சிந்தை வியக்க வைக்கிறது. இக்கதையின் கடைசி வரியும், கதையின் தலைப்பும் உங்கள் ஆழத்தை உணர்த்துகிறது . 500 பக்க நாவல் தரும் உணர்வுகளை உங்கள் சிறுகதையில் கடத்துகிறீர்கள் சகோ . பட்டப்பெயர்-ஆல் பல சச்சரவுகள் எங்கள் ஊரில் நடைபெற்றுள்ளது சகோ .அதை வைத்து முன்பு நான் ஒரு குறும்படம் இயக்கியுள்ளேன் .. https://youtu.be/-NYonOQOhqE?si=wd8RIHuwBO0vv54G நேரம் கிடைக்கும் பொழுது காணுங்கள் . தான் தோன்றித்தனம் இல்லாத கட்டுரையை எழுத இயலவில்லை என்னால் மன்னித்து விடுங்கள் சகோ . அந்த ஜார்ஜ்புஷ் நான்தான் சகோ , ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளி செல்ல அழுதவன் நான் , ஒரு பாரக்ராப் படிக்க மூன்று மணிநேரம் போராடுபவன் ,தினமும் அழுபவன் பள்ளி நாட்களில் , அதிகமாக பேசாதவன்...