Posts

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

Image
         சிறு மாற்றத்துக்காக வெண்முரசில் இருந்து கொண்டு மூச்சு வாங்குவதற்க்காக கையில் எடுத்த புத்தகம் " விண்ணளந்த சிறகு " . இயற்கை சார்ந்த சிறிய புத்தகம் ஆனால் மிகப்பெரிய உலகை காட்டும் விரிவான புத்தகம். நாற்பது ஆண்டுகள் தேடல் கொண்ட,  நூற்றி பதினைந்து பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகம் . இயற்க்கை விரும்பிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் .    நாடு  என்பது மக்களால் மட்டும் ஆனது அல்ல , அதில் ஓடும் ஆறுகள் , மலைகள் ,ஓடைகள் ,காடுகள் ,அங்கு வளரும் தாவரங்கள் ,காட்டுயிர்கள் , சிற்றுயிர்கள் , இவை அனைத்துமே ஒரு நாட்டின் முழு பரிணாமம் . ஓடி ஓடி பொருள் சேகரிக்கும் அவசரத்தில் இதையெல்லாம் மறந்து இருப்பது மனிதர்களின் அறிவின்மை . பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல் , " நிஸகாந்தி " என்ற ஒரு பூச்செடி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் இரவில் இரண்டு மணி நேரம் மட்டும் பூப்பதாகவும் , புத்தபூர்ணிமா நாளில் பூப்பது , என என்னை வியப்பில் ஆழ்த்தியது அதன் தகவல்கள்  . இந்த செடியை எழுத்தாளர் தன் வீட்டீலேயே வளர்த்து பார்த்து இயற்கையின் பூரண தரிசனத்தை அனுபவித்துள்ளா

உருமாற்றம் - நாவல் வாசிப்பு அனுபவம்

Image
  நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃபிரான்ஸ் காஃப்கா , ஆஸ்திரிய நாட்டு எழுத்தாளர் , சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் . மனிதச் சீரழிவையும் , வாழ்வின் கொடூரங்களையும் , அவரது பாணியில் எழுத்தாக மாற்றி பல உன்னத படைப்புகளை இவ்வுலகத்திற்கு தந்தவர் .  இவரது எழுத்தின் பாதிப்பு கொண்ட  எழுத்தாளர்கள் இன்றும் உள்ளனர் .  இவரது படைப்புகளை சாதாரணமாக வாசிக்க இயலாது . வாழ்வின் சிக்கல்களை , பல்வேறு பட்ட மனித உளகிளர்ச்சிகளை ,மிக ஆழமான நுட்பத்துடன் கதைப்படுத்தி இருப்பார் .  - உருமாற்றம்  - சீனாவின் நெடுஞ்சுவர்  - ஒரு நாயின் ஆராய்ச்சி  - வளை  - தண்டனைக் குடியிருப்பில்  - இராட்சத மூஞ்சுறு                                        என்ற 6 சிறுகதை தொகுப்பே இந்த புத்தகம் .                         07-12-2022 - ல்  வாசிக்க ஆரம்பித்து 27-12-2022 - ல் நிறைவு பெற்றது.  240 பக்கம் வாசிக்க ஏன் 20 நாள் எடுத்து கொண்டேன் என்றால் , வெறுமனே வாசித்து மட்டும்  முடிக்க கூடிய நாவல் வகையை சார்ந்தது அல்ல இது .   மன ஆய்வும் உள் உணர்வு சோதனைகளையும்  இந்நாவல் செய்கிறது நம்முள். இவரது சொந்த அனுபவங்களையும் ,அக்காலய அரச

பிரபஞ்சன் | வானம் வசப்படும்

Image
 பிரபஞ்சன்  இவரை பற்றி சிந்திக்கும் போதெல்லாம் என் நினைவில் வருபவை இவரின் சில வரிகள் . " வேலையும் சம்பளமும் மனித இனத்திற்கு எதிரானது " இந்த வரியில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளது . உலகின் மிக சிறிய கதை என ஏதேதோ கதை கூறுகிறார்கள் ஆனால் என் பாட்டி எனக்கு சொன்ன அந்த ஒரு வரி கதை தான் மிகச்சிறிய கதை அது " ஒரு ஊர்ல ஒரு நரி கதை அதோட சரி " இந்த கதையிலும் தந்திரம் நிறைந்துள்ளது .  இன்னும் சில சம்பவங்கள் , ஒரு வழிப்போக்கன் இரவு 1.30 மணிக்கு  வீட்டுக் கதவை தட்டி, என்ன வேணும் தம்பி ஏன் இந்த நேரத்துல கதவை தட்டுறீங்க ? , இல்ல சார் நைட்டு 1.30 க்கு ஒரு எழுத்தாளர் என்ன செய்வாரு னு பாத்துட்டு போலாம் னு வந்தேன் என்ன செய்றீங்க சார் ? , இந்த அளவிற்கு இவர் மீது பித்துக் கொண்ட வாசகர்கள் அப்போது இருந்துள்ளனர் . இரு வேளை உணவிற்கு உத்திரவாதம் இருந்திருந்தால் இன்னும் சில நல்ல படைப்புகளை படைத்திருப்பேன் ,நான் ஒன்றும் புதுமை பித்தன் அளவுக்கு வறுமையில் இல்லை , எனக்கடுத்து வரும் தலைமுறை என்னை விட நல்லா இருக்கணும் என அவர் கூறும்  போது மனம் கலங்குகிறது .  பெரிய செல்வம் செழித்த வீட்டில் வளர

கேள்வி - பதில்கள்

Image
                      15 கேள்விகளில் 5 -ற்கு  விடை அனுப்பியுள்ளேன் , கடிதம் அனுப்பிய 15 பேருக்கும் மிக்க நன்றி .   கடவுள் நம்பிக்கை உள்ளதா நந்தா ?                                                                                                      பொதுவாக கட+ உள் = கடவுள் , தன்னை கடத்தலே கடவுள் என்பது ஒரு விதி , 'அஹம்ப்ரமாம்ஸி ' நானே கடவுள் என்பதும் ஒரு விதி  , இந்த உலகில் பல கோடி கடவுள்கள் உள்ளன ,அதிலும் தமிழர்களுக்கு அனைத்துமே இறையம்சம் கொண்டவை, குலதெய்வ வழிபாடு  இயற்க்கையை வணங்குதல்  மற்றும்  புனிதமாக தோன்றும் அனைத்துமே தமிழர்களுக்கு வணங்கத்தக்கது , பெற்ற அன்னை , பூர்விக நிலம் , ஐம்பூதங்கள் , காளை , இளம் வயதில் மரணித்தவர்கள் ,செய்யும் தொழில் , ஆயுதங்கள் , தந்தை , ஆசான் ,இன்னும் பல ,.                                                முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்டவர் என எவரும் இருக்க வாய்ப்பு இல்லை அதே போல் கடவுள் மறுப்பாளர் என எவரும் இருக்க வாய்ப்பு இல்லை  , சொந்த வாழ்க்கையில்  சில தருணங்களில் சில சம்பவங்களில்                             உணரலாம் , அதை மற்றவரிடம் கூறும் பொது ச

நான்தான் ஒளரங்கசீப் - நாவல் வாசிப்பு அனுபவம்

Image
 நான்தான் ஒளரங்கசீப் - நாவல் வாசிப்பு அனுபவம்  அல்லாஹு அக்பர்.  அன் லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸூலுல்லாஹ். லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ். மாஷா அல்லாஹுகான வமா லம் யஷஃலம் யகுன்.                                           சாரு நிவேதிதா எழுதிய அழகிய புத்தகம் , இவரை அறியாத வாசகர்கள் இருக்க முடியாது ஆனால் அனைவராலும் இவரின் எழுத்தை உள்வாங்கிக்கொள்ள இயலாது , தொடர்ந்து படித்தால் வாய்ப்பு உள்ளது .                                               ஹிந்தி யை மற்றுமே பேச தெரிந்த  கங்காராம் என்ற அகோரியின் உடலில் இருந்து பார்சி  மற்றும்  அரபி ,மொழியில் ஒளரங்கசீப் தன் வரலாற்றை எழுத்தாளரிடம்  கூறுவதாக  அமைந்துள்ளது நாவல் ,கதையில் வரும் சில மனிதர்களும் பல சம்பவங்களை கூறுவது கதையை முன்நகர்த்துகிறது.                                                                                               தேகம் ,ஸிரோ டிகிரி ,படித்ததால்  சாரு மீது ஒரு இனம் புரியாத பற்று எனக்கு உண்டு , அவரின் அனைத்து நேர்காணல்களையும் கண்டுள்ளேன் முன்பே , புத்தகமாக வாங்கி படிக்க ஆசைப்பட்டேன் , bynge app - ல் வாசிக்க ஆரம்பி

ஹாரி பாட்டர் - அனுபவம்

Image
      இளம் வயதில் இதயத்தை பதம் பார்த்த காவியம், ' ஹாரி பாட்டர்' . ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக நெருக்கமானவை, நானும் அதில் ஒரு அங்கமாக இருந்துள்ளேன்.  மகாபாரதத்தையும் இராமயணத்தையும் வெவ்வேறு புத்தகங்களில் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் கற்பனையாக எழுத கூடிய காவியங்கள் அல்ல இவை ஆகவே உண்மையில் நடந்த இதிகாசங்கள் என தோன்றும், ஆனால் இங்கு முழுக்க முழுக்க கற்பனையில் எழுதப்பட்ட கதை என்று அறிந்தும் கூட மனம் ஏற்க்க மறுக்கிறது சிறுவயது முதல் இன்று வரை.       2014 - ல் எனக்குள் சென்ற உலகம் , இன்னும் மீளவில்லை துளி அளவுகூட, எட்டு பாகத்தையும் வருடத்திருக்கு ஒரு முறை என்று எட்டு முறை உள்வாங்கினேன். வரைபட கருவியின் கம்பியை பிய்த்து மந்திர கோளாக பயன்படுத்தியுள்ளேன், ஒட்டக் குச்சி மீது அமர்ந்து பறக்க நினைத்தேன், மொட்டை மாடியில் நின்று ஹாக்ரிட் நம்மை ஹாக்வார்ட்ஸ்-க்கு அழைத்து செல்ல மாட்டாரா என ஏங்கியிருக்கேன், பள்ளிக்கூட சுவற்றில் மோதி விழுந்தேன் ,நான் படித்த ஆண்கள் மேல்நிலைபள்ளியில் ஹெர்மாயினியைத் தேடியிருக்கிறேன், அது ஒரு பித்து நிலை.   என் உலகத்தை யாரிடமும் பகிராத சுயநலவாதியாக இருந்துள்ளேன், யாரா

இராவணன் - பற்றிய வாசிப்பு அனுபவம்

Image
 அசுரன் - வீழ்த்த பட்டவர்களின் வீர காவியம் - நாவல் வாசிப்பு அனுபவம்.            வார்த்தைகள் வசப்பட மறுக்கின்றது, இராமாயணம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அறிந்திருக்கும் இதிகாசம், புத்தகவாசிப்பின் மூலமும் செவி வழியும், தொலைக்காட்சி தொடர் மூலமாகவும் அறிந்திருப்பீர்கள்.    இராவணன் பற்றிய என்னுடைய பல கேள்விகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பதில்களை தந்தது, என்னுடைய சில சிந்தனைகளை தலைகீழாக மாற்றியது இந் நாவல் ,.    சீதையின் பிறப்பு மற்றும் இறப்பு என்னை உளுக்கியது, இந்த புத்தகமே வித்தியாசமான அணுகுமுறையுடன் கதை சொல்லுகிறது,... ஆசிரியருக்கு இது முதல் புத்தகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,.. சுயநலத்தைவிட அதிகமாகக் கண்டிக்கத்தக்க விஷயம் வேறொன்றும் இல்லை. தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு மனிதன்தான் எல்லோரையும்விட மிகவும் துரதிர்ஷ்டமானவன். ஒருவன் ஏன் பிறக்கிறான்? வெறுமனே சாப்பிட்டு உடலைப் பருமனாக வளர்ப்பதற்கா? அல்லது சந்ததியினரை உருவாக்கிப் பன்றிகளைப்போல இனப்பெருக்கம் செய்வதற்கா? இந்த அழகான பூமியை உடற்கழிவுகளால் அசுத்தப்படுத்தவும், பிறகு, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவிதமான மாற்றத்தையும் இ