16-09-2024
பிடிவாத குணத்தை ஒருபோதும் தவற விடக்கூடாது. சில கொள்கைகளையோ நமக்கு பிடிக்காத விடயங்களை பிறருக்காக தளர்த்தக் கூடாது.
கண்டிப்புத் தன்மையும் நேர்மையான நிமிர்வும் நம்மை நீண்ட நாட்கள் நிறைவாக வைத்திருக்கும்.
இன்று ஒரு நபரை தவிர்த்தேன் வேண்டும் என்றே, கொஞ்சம் நெருடலாக இருந்தது, இருந்தும் பரவா இல்லை, நான் செய்தது சரியே,.
ஆபத்தில் உதவாத நபர்களை கூட மன்னித்து விடலாம்,.. ஆபத்து நீங்கிய பின்பும் கண்டுகொள்ளாத நபர்களை நாமும் அப்படியே விடுவதே சால சிறந்தது.
நான் உதவி கேட்பதே மிக அறிது, அந்த உதவியை செய்ய தகுதி உள்ளவரே நிராகரித்தால், அந்த நபர் மீது ஏற்படும் எண்ணம் ?.
குறுகிய மனப்பாங்கு கொண்ட மனிதர்களை விட்டு தூர விலகுவது உத்தமமான செயல்.
என் மனதுக்கு பிடித்தவாரு புகைப்படம் நிறைய எடுப்பேன், சில காலமாக ஒன்றுமே அமையவில்லை, காரணம் என் கை பேசியின் பழுது நீக்கத்தில் உள்ள குறைபாடு.
இன்று சில புகைப்படங்கள் நன்றாக அமைந்தது.


Comments
Post a Comment